
இப்போராட்ட முடிவு ஏற்கெனவே தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில நிர்வாகிகளை அழைத்துப்பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுகோள் வைக்கப்பட்டது. ஆனால் இன்றுவரை அரசு ஊழியர் சங்க நிர்வாகிகளை அழைத்து பேசுவதற்கு தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் மாநில மாநாட்டு முடிவின்படி வரும் 22ம்தேதி அன்று திட்டமிட்டபடி ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டத்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இப்போராட்டத்தில் தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் பணியாற்றும் லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் பங்கேற்க உள்ளனர் என்று சங்கத்தின் மாநிலத் தலைவர் இரா.தமிழ்செல்வி, பொதுச் செயலாளர் இரா.பாலசுப்பிரமணியன் ஆகியோர் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment