Thursday 29 January 2015

ஸ்பெக்ட்ரம் ஏலம் மூலம் ரூ.1 லட்சம் கோடி திரட்ட முடிவு..

ஒரு மெகா ஹெர்ட்ஸ், 3ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசைக்கு, அடிப்படை விலையாக, 3,705 கோடி ரூபாயை மத்திய அமைச்சரவை நேற்று நிர்ணயித்துள்ளது. 3ஜி மற்றும் பிற அலைவரிசைகளை ஏலம் விடுவதன் மூலம், 1 லட்சம் கோடி ரூபாய் திரட்டவும் அரசு முடிவு செய்துள்ளதுபிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று கூடிய மத்திய அமைச்சரவை கூட்டத்தில், 3ஜி அலைக் கற்றையின், 1 மெகா ஹெர்ட்ஸ் அளவுக்கு, அடிப்படை விலையாக, 3,705 கோடி ரூபாயை அமைச்சரவை நிர்ணயம் செய்தது. இது, 2,100 மெகாஹெர்ட்ஸ் பேண்ட் ஆக இருக்கும்.அது போல, 800, 900, 1,800 மெகா ஹெர்ட்ஸ் பேண்ட் அலை வரிசைகளை மார்ச் 4ல் ஏலமிட, ஏற்கனவே முடிவு செய்யப் பட்டுள்ளதுஇந்த தகவலை, மத்திய தொலை தொடர்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நேற்றுதெரிவித்தார்...

No comments: