Saturday 24 January 2015

ERP அமலக்கத்தால் GPF பட்டுவாடாவில் என்னதான் நடந்தது...

அருமைத் தோழர்களே ! GPF விண்ணப்பித்தவர்களுக்கு கடந்த 06.01.2015 அன்றே மாநில அலுவலகத்தால் பணி செய்யப்பட்டிருந்தது, GPFபண்ட் டெல்லியில் இருந்து வருவதில் காலதாமதம் ஆனதை தமிழ் மாநிலம் முழுவதும் உள்ள 18 (CGM அலுவலகம் உட்படதொலைத் தொடர்பு மாவட்டங்களில் இருந்து  GPF  தொகை பெறுவதற்கு விண்ணப்பித்த ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் எண்ணிக்கை  5660  பேர் .இதற்கான நிதியினை நமது மத்திய, மாநில சங்கத்தின்   தொடர்  முயற்சியால் முழுமையாக 21-01-2015 அன்று நமது மத்திய நிர்வாகம் ஒதுக்கீடு செய்ததுஇந்நிலையில்... நமது மாநில நிர்வாகம் GPF தொகை பெறுவதற்கு விண்ணப்பித்த ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு 22-01-2015 அன்று பணப்பட்டுவாடா செய்யப்படும் என்று நமது மாநில சங்கத்திடம் தெரிவித்ததுஒரு மாவட்டத்தில் ஏற்பட்ட ஒரு  ஊழியர் இறப்பு காரணமாகஅவர்கள் குடும்பத்திற்கு உடனடியாக சேமநலநிதியிலிருந்து நிதி வழங்க நிர்வாகம் முற்பட்ட போது புதிய மென்பொருள் ERP   அமுலாக்கத்தின் குளறுபடி காரணமாக 22-01-2015 அன்று GPF தொகை வங்கிக்கு அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டது.நமது   மாநில சங்கத்தின் தொடர் முயற்சியால்...மாநில நிர்வாகத்தால் ERP குளறுபடி சரி செய்யப்பட்டு 23-01-2015 இன்று 24.01.2015  மாநிலம் முழுவதும் GPF தொகை பெறுவதற்கு விண்ணப்பித்த 5660 ஊழியர் மற்றும் அதிகாரிகளுக் காண தொகை 17 கோடியே 74 லட்சம் ரூபாய் வங்கிக்குஅனுப்பப்பட்டுள்ளது. 25-01-2015 (ஞாயிற்று கிழமைமற்றும் 26-01-2015 (குடியரசு தினம்) விடுமுறை என்பதால் முதன்மை கணக்கு அதிகாரி (Chief Accounts Officer) திரு.கதிரேசன் அவர்கள் வங்கிக்கு அனுப்பப்பட்டு 24-01-2015 க்குள் ஊழியர் &  அதிகாரிகளுக்கு   GPF தொகை பட்டுவாடா செய்திட மாநில நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
--- என்றும் தோழமையுடன், எஸ். சூரியன் ...D/S-BSNLEU.

No comments: