Saturday 24 January 2015

இது சரிதானா ?




அரசு நிர்வாகம் சாதி,மத பேதங்களுக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும். அரசு நிர்வாகத்தில் மதத்தையோ, சாதியையோ இணைக்க கூடாது என்பது விதிமுறை. ஆனால் தமிழ்நாடு அரசுபோக்குவரத்து கழகத்தின் உடுமலை பணிமனைக்குஉட்பட்ட அரசு பேருந்தில் ஒரு மதத்தின் மாநாடு குறித்த விளம்பரம் செய்யப்பட்டிருக்கிறது. அந்த விளம்பரத்திற்கான பணத்தை பெற்று கொண்டு அரசு நிர்வாகம் அதனை அனுமதித் திருக்கிறது. ஏற்கனவே தலைவர் களின் பெயரில் ஓடிய பேருந்துகளில் கூட சாதிய அடையாளம் காணப்பட்டு பிரச்சனை உருவானது. அது தமிழகத்தின் சட்டஒழுங்கு பிரச்சனையான பின்பு, அனைத்துக்கட்சிகளின் முடிவிற்கேற்ப, அனைத்து அரசுபோக்கு வரத்தும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் என்ற ஒரே பெயரில் இயக்கப்படுகிறது. ஆனால் தற்போது புதியதாக மதத்தின் பெயரால் இன்னொரு சட்ட ஒழுங்கு பிரச்சனையை உருவாக்க உடுமலை அரசு போக்குவரத்து பணிமனை வழி காட்டுகிறதோ ? என்ற ஐயம் உடுமலை பகுதி மக்களிடம் எழுந்திருக்கிறது. அரசு போக்குவரத்து கழக தலைமை நிர்வாகம் இதனை கவனிக்கின்றதா?

No comments: