Wednesday 21 January 2015

தோழர் லெனின் நினைவு தினம் , - ஜனவரி 21.

1900ம் ஆண்டு ஜெர்மனிக்கு சென்றலெனின் அங்கிருந்து ஒரு பத்திரிக்கை நடத்தத் தொடங்கினார்அடுத்த பதினேழு ஆண்டுகள் அவர் ஐரோப்பாவிலேயேதங்கியிருந்து ஷா மன்னனின் கொடுங்கோன்மை பற்றியும்ரஷ்ய தொழிலாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதுபற்றியும் நிறைய எழுதினார்லெனினின் கோபத்திற்கு காரணம் இல்லாமல் இல்லைஷா மன்னனின் ஆட்சியில்நிலக்கரி தட்டுப்பாட்டால் தொழிற்சாலைகள் மூடப்பட்டனஒரு ரொட்டித் துண்டுக்காக மக்கள் ஒருவரையொருவர்வெட்டிக் கொல்லும் அளவுக்கு உணவு பஞ்சம் கோர தாண்டவம் ஆடியதுமன்னன் தன் மனைவி அலெக்ஸாண்ட்ராவின்கைப்பாவையாக விளங்கினான்மனைவியோ ரஷ்புட்டின் என்ற காமுக சாமியாரின் கட்டுப்பாட்டில் இருந்தாள்.மன்னனும்ராணியும் மக்கள் நலன் மீது அக்கறை இல்லாமல் இருந்ததால்தான் மன்னனைக் கொல்ல திட்டம் தீட்டினார்லெனினின் அண்ணன் அலெக்ஸாண்டர்தங்கள் பிரச்சினைகளை சொல்ல அரண்மனை நோக்கி ஊர்வலமாக சென்றஅப்பாவி மக்கள் ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொல்லப்பட்டனர்பொறுத்தது போதும் என்று ஒரு தேசமே பொங்கிஎழுந்தது

1917ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வீதிகளில் திரண்ட ரஷ்ய மக்கள் மன்னனுக்கு எதிராக எழுப்பியகோஷங்களால் ரஷ்யாவே அதிர்ந்ததுஅந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மிதவாத சோசியலிஸ்ட் என்று தங்களைஅடையாளம் காட்டிக்கொண்ட ஒரு குழு ஆட்சியைக் கைப்பற்றியதுபெரும் கோபத்தில் இருந்த கம்யூனிஸ்டுகள் ஷாமன்னனையும்அவனது ஒட்டுமொத்த குடும்பத்தையும் நிற்க வைத்து சுட்டுக் கொன்றனர்ஆனால் புதிதாக ஆட்சிக்குவந்தவர்களாலும் உணவு தட்டுப்பாட்டைப் போக்க முடியவில்லைஷா மன்னன் மறைந்தாலும் நாட்டின் அவலங்கள்மறையவில்லைஅதுதான் சரியான தருணம் என்று நம்பிய லெனின் தன் தாய்நாடு நோக்கி புறப்பட்டார்அவருடையசகாக்கள் உருவாக்கியிருந்த செஞ்சேனியைக் கொண்டு அதே ஆண்டு அதாவது 1917-ஆம் ஆண்டு நவம்பர் 7-ஆம்   நாள் தலைநகர் பெட்ரோகிராடை (Petrograd) சுற்றி வளைத்தது லெனினின் படைகள்இடைக்கால ஆட்சியின் வீரர்கள்துப்பாக்கிகளை கீழே போட்டு விலகி நிற்கஒரு சொட்டு இரத்தம் சிந்தாமல்வன்முறை நிகழாமல் ஆட்சியைக்கைப்பற்றினார் லெனின்ரஷ்யாவில் கம்யூனிஸ்டு ஆட்சி மலர்ந்ததுபிரச்சாரத்தில் கூறியிருந்ததைப் போலவே ஆட்சிக்குவந்த மறுநாளே நில பிரபுக்களின் விளை நிலங்களை கைப்பற்றி விவசாயிகளுக்கு பிரித்துக் கொடுத்தார் லெனின்.தொழிற்சாலைகளின் நிர்வாகம் தொழிலாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டதுவங்கிகள் தேசியமயமாக்கப்பட்டனலெனின்ரஷ்யாவின் கம்யூனிஸ்டு ஆட்சியை அமைத்த பிறகுதான் பெரும்பாலான நாடுகளில் கம்யூனிசம் பரவத் தொடங்கியது.கார்ல் மார்க்ஸின் கொள்கைகளை அவர் பின்பற்றினாலும் அடக்கு முறையை வன்முறையால்தான் எதிர்கொள்ளவேண்டும் என்று அவர் நம்பினார்நிறைய புத்தகங்களை படிக்கும் பழக்கம் அவரிடம் இருந்ததுதனது புரட்சிகரமானகருத்துகளை அவர் புத்தகங்களாகவும் எழுதியிருக்கிறார்அவரது எழுத்துகள் 55 தொகுதிகளாக வெளிவந்திருக்கின்றன. 1922ஆம் ஆண்டு மே மாதம் லெனினை முடக்குவாதம் தாக்கியதுஉடல் செயலிழந்ததுஇரண்டு ஆண்டுகளில் 

அதாவது 1924-ஆம் ஆண்டு ஜனவரி 21-ஆம் நாள் தனது 54-ஆவது   வயதில்   அவர்   காலமானார். அவரது  பதப்படுத்தபட்ட  உடல் இன்றும்  மாஸ்கோவின்  செஞ்சதுக்கத்தில்  பார்வைக்கு  வைக்கப்பட்டுள்ளது.  நாட்டில் 

அடக்கு  முறையையும்முறையற்றஆட்சியும் நடந்தபோது நம்மால் என்ன செய்ய முடியும்என்று மற்றவர்களைப்போல் லெனினும் ஒதுங்கியிருந்திருந்தால்அவரால் வரலாற்றில் அவ்வுளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க 

முடியாது.கம்யூனிசம் கொள்கைகளின் நிறை,குறைகளைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டியதில்லைஆனால் நாட்டில் வறுமை ஒழிய வேண்டும்எல்லொருக்கும்வேலை கிடைக்க வேண்டும்அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும்என்றும் சிந்தித்ததாலேயே வரலாற்றில்அழியா இடத்தைப் பெற்றிருக்கிறார் லெனின்அவரைப் பற்றியும்ரஷ்ய 

புரட்சியைப் பற்றியும் வருணிக்க முனைந்தமகாகவி பாரதியார்....

மாகாளி பராசக்தி உருசிய நாட்டினிற்
கடைக்கண் வைத்தாள்அங்கே,
ஆகாவென் றெழுந்ததுபார் யுகப்புரட்சி,
கொடுங்காலன் அலறி வீழ்ந்தான்,
வாகான தோள்புடைத்தார் வானமரர்,
பேய்க ளெல்லாம் வருந்திக் கண்ணீர்
போகாமற் கண்புதைந்து மடிந்தனவாம்,
வையகத்தீர்,புதுமைகாணீர்!நம்மால்   மிகப் பெரியமாற்றத்தை   ஏற்படுத்த   முடியும்   என்ற  அசைக்க முடியாநம்பிக்கையும்தன் இலக்கை நோக்கி இரவு,    பகல்பாராமல் உழைக்கும் மனஉறுதியும்,   எல்லோருக்கும் எல்லாமும்   வேண்டும்   என்ற   பரந்த மனப்பான்மையும்    தான் லெனின் என்ற அந்த   வரலாற்றுநாயகனுக்கு   வானத்தை வசப்படுத்த   உதவிய பண்புகள்.அதே பண்புகளை நாமும் வளர்த்துக்     கொண்டால் லெனினைப் போல் ஒரு தேசத்தின்தலையெழுத்தையே மாற்ற முடியாவிட்டாலும்,குறைந்தது நம் தலையெழுத்தையாவது மாற்றிக் கொள்ளலாம்.நாம் விரும்பும் எந்த வானத்தையும் வசப்படுத்திக் கொள்ளலாம்.

No comments: