Friday 16 January 2015

2015- ஜனவரி -17, எம். ஜி. இராமச்சந்திரன் பிறந்த நாள் ...

இராமச்சந்திரன் இலங்கையின் கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பிட்டியில் மருதூர் கோபால மேனனுக்கும் சத்திய பாமாவுக்கும் மகனாகப் பிறந்தார்அவருடைய தந்தையின் மறைவுக்குப் பின்னர் தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் குடியேறினார். குடும்ப சூழ்நிலைகளின் காரணமாக படிப்பைத்தொடர முடியாததால் இவர் நாடகங்களில் நடிக்கத்தொடங்கினார். நாடகத்துறையில் நன்குப் அனுபவமான நிலைமையில் திரைப்படத்துரைக்குச் சென்றார். திரைப்படத்துரையில் தனது அயரா உழைப்புக் காரணமாக முன்னேரி நடிகரானார். இவரது நடிப்பு பெரும் எண்ணிகையிலான மக்களைக் கவர்ந்தது. எம்.ஜி.ஆர். திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமாவார். இவர் தங்கமணியை மணந்தார் அவர் நோய்க்காரணமாக இறந்தார். அதன் பிறகு சதானந்தவதியை மணந்தார் அவரும் நோய்க் காரணமாக இறந்தார். பின்னர் இவர் வி.என்.ஜானகியை மணந்துக் கொண்டார். இவருக்கு பிள்ளைகள் கிடையாது.
இவர் ஒரு  முன்னணித் தமிழ்த் தேசியவாதியாகவும்,திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய உறுப்பினராகவும் திகழ்ந்தார். அக்கட்சியின் பொருளாளராகவும் நீண்ட காலம் பணியாற்றினார்சி. என். அண்ணாத் துரையின் மறைவுக்குப் பின்மு. கருணாநிதி   முதலமைச் சரானதைத் தொடர்ந்து இடம்பெற்ற சம்பவங்களால் ஏற்பட்ட முரண்பாடுகள் எம்.ஜி.ஆர் கட்சியை விட்டு வெளியேற வேண்டிய நிலையை ஏற்படுத்தின. 1972 ல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியொன்றை அவர் ஆரம்பித்தார்.திரைப்படங்களின் மூலம் அவரடைந்த புகழும், அவருடைய வசீகரமான தோற்றமும், சமூகத் தொண்டனாகவும், ஏழைகள் தோழனாகவும், கொடையாளியாகவும், வீரனாகவும் நடித்ததன் மூலம் பெற்றுக் கொண்ட நற்பெயரும், அவர் மிக விரைவில் மக்களாதரவைப் பெற உதவின. 1977ல் இடம் பெற்ற தேர்தலில் பெரு வெற்றி பெற்றுத் தமிழ் நாட்டின் முதலமைச்சரானார். 1984 ல் இவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டும், 1987 வரை 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக முதலமைச்சர் பதவியை வகித்துப் பதவியிலிருக்கும் போதே காலமானார். அவர் மறைவிற்குப் பின் "பாரத ரத்னா "விருது வழங்கப்பட்டது.

2 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவினைப் போற்றுவோம்

Ganesan , Dist vice President , Palani said...

வாழ்ந்தவர் கோடி..மறைந்தவர் கோடி ..மக்களின் மனதில் நிற்பவர் யார் ? " ...மக்கள் திலகம் புரட்சி தலைவர் !! அவரைப் பற்றிய இன்றைய செய்தி மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது !! நன்றி தோழரே !! :: Ganesan Dist VP BSNLEU