Tuesday 24 September 2013

வங்கி ஊழியர்கள் 25ஆம் தேதி வேலை நிறுத்தம்!

நாடு முழுவதும் வருகின்ற 25 ஆம் தேதி வங்கி ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில்ஈடுபடுகின்றார்கள்.
வங்கித்துறை சீர் திருத்தங்களை நிறுத்த வேண்டும், வங்கிகளை இணைப்பதை நிறுத்த வேண்டும் போன்ற பல கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய வங்கி பணியாளர்கள் சங்கம், இந்திய வங்கி பணியாளர்கள் சம்மேளனம் ஆகியவற்றின் கூட்டு அழைப்பின் பேரில் வங்கி பணியாளர்கள் வருகின்ற 25 ஆம் தேதி நாடு முழுவதும் ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள்.
இந்த வேலை நிறுத்த போராட்டத்தில், அதிகாரிகள் தவிர்த்து பொதுத்துறை, தனியார் மற்றும் வெளிநாட்டு வங்கிகளின் ஊழியர்கள் கலந்துகொள்கிறார்கள். இந்த போராட்டத்தால் பண பரிவர்த்தனைகள் பாதிக்கப்படும்என கூறப்படுகிறது
வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் வெற்றி பெற நமது BSNLEU சங்கம் உளப்பூர்வமான வாழ்த்துக்களை ஊரித்தாக்குகிறது.

 25.09.2013 -  ஆதரவு ஆர்ப்பாட்டம்

மத்திய தொழிற்சங்கங்களின் அறைகூவலின்படியும்,வங்கி ஊழியர்களின் போராட்டத்திற்கு ஆதரவாகவும் 25.09.2013 மதியம் 1 மணிக்கு மதுரை G.M அலுவலகத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டுகிறோம் .
போராட்ட வாழ்த்துக்களுடன் --எஸ்.சூரியன் ...மாவட்ட செயலர்.
 

No comments: