Sunday 29 September 2013

29.09.2013 வரவேற்பு குழுவின் நிர்வாகிகளின் முதற்கூட்டம்

அருமைதோழர்களே!அனைவருக்கும்வணக்கம் திண்டுக்கல்லில் அமைக்கப்பட்ட நமது மதுரை மாவட்ட மாநாட்டு வரவேற்பு குழுவின் நிர்வாகிகளின் முதற்கூட்டம் 29.09.2013 அன்று வரவேற்பு குழுவின் செயல் தலைவர் தோழர்.எஸ். ஜான் போர்ஜியா  தலைமையில் சிறப்பாக நடை பெற்றது.அக்கூட்டத்தில் 18 தோழர்கள் கலந்து கொண்டனர்.மாநில அமைப்பு செயலர் தோழர். சி.செல்வின்சத்தியராஜ் உடன் இருந்தார்.நிர்வாகிகள் கூட்டம் மாநாட்டை சிறப்பாக நடத்து வதற்கான யுக்திகளை வகுத்தது.திண்டுக்கல் ரெவின்யு மாவட்டத்தில் உள்ள 10 கிளைகளின் செயலர்களை கொண்ட மேலும் ஒரு கூட்டத்தை கூட்டி இன்னும் விரிவாக திட்டமிட்டு மாவட்ட மாநாட்டை அனைவரும் பாராட்டும் வண்ணம்,வரலாற்று பதிவை ஏற்படுத்தும் வண்ணம் நடத்திட உறுதி பூண்டது.
அதன்பின், மார்க்சிஸ்ட்கட்சி சட்ட மன்ற உறுப்பினரான மரியாதைக்குரிய தோழர்.K.பாலபாரதி.MLA,அவர்களை நமது BSNLEU மாவட்ட செயலர் தோழர்.S.சூரியன் உள்ளிட்ட வரவேற்புகுழு சந்தித்து மாநாட்டின் வரவேற்பு குழுவின் தலைமை பொறுப்பினை ஏற்று மாநாட்டினை வழிநடத்தி தரவேண்டுமாய் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.தோழர்.கே.பாலபாரதி அவர்களும் மனமுவந்து மாநாட்டினை சிறப்பாக திண்டுக்கல்லில் நடத்துவோம் என உறுதி படக்கூறி, வாழ்த்துக் கூறினார்


தோழர்.K.பாலபாரதி MLA அவர்களுடன்  நமது வரவேற்புகுழு   





























No comments: