Thursday 5 September 2013

06.09.13 கண்டன ஆர்ப்பாட்டம்

06.09.13  ஒப்பந்த ஊழியர்களின் நாடு  தழுவிய  கண்டன ஆர்ப்பாட்டம்

பெரும்பாலான மாநிலங்களில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு,குறைந்தபட்ச ஊதியம் கார்ப்பரேட் அலுவலகஉத்தரவுப்படி வழங்கப்படுவது இல்லை மேலும் அவர்களது ஊதியங்கள் EPF&ESIபங்களிப்புகளின்ஒருகணிசமானபகுதி ஒப்பந்தக்காரர்கள் மற்றும் நேர்மையற்றஅதிகாரிகள் மூலம்  சூறையாடப்படுகின்றன. தொழிலாளர்கள் தங்கள் ஊதியங்கள்,EPF&ESI  சலுகைகள் கோரிபோராட்டத்தில் செல்லும் போதுஅவர்கள் இரக்கமற்று வேலைநீக்கம் செய்யபடுவது பல மாநிலங்களில் நடக்கிறது. கார்ப்பரேட் அலுவலகத்தின் கவனத்திற்கு இதைகொண்டு சென்ற BSNLEU எடுத்த அனைத்து முயற்சிகளும்செவிடன் காதில் ஊதிய  சங்காய் உள்ளதால் , 26.08.2013 அன்று நடைபெற்ற BSNLEU, மத்திய செயலக கூட்டம் பல்வேறு மாநிலங்களில் வேலை நீக்கம்செய்யபட்ட தொழிலாளர்களை மீண்டும்பணிக்கு  எடுக்க கோரி,  06.09.2013 அன்று கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தமுடிவு செய்துள்ளது , BSNLEU மாநில மற்றும் மாவட்ட சங்கங்கள் குறைந்தபட்ச ஊதிய மீது கார்ப்பரேட்அலுவலகம்  உத்தரவுகளை செயல்படுத்த வேலை நீக்கம் செய்யபட்ட தொழிலாளர்களை மீண்டும் எடுக்க   சக்தி மிகுந்த ஆர்ப்பாட்டம் 06-09-2013 அன்று  நடத்தநமதுமத்திய சங்கம் அறைகூவல்விடுத்துள்ளது .
03.09.2013 அன்று திருமங்கலத்தில் நடை பெற்ற நமது மாவட்ட செயற்குழு முடிவின் அடிப்படையில் ....06.09.2013 வெள்ளி கிழமை நமது மதுரை SSA-யில் 3 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்திட திட்டமிட்டுள்ளோம் அதன்படி ----
  • மதுரையில் LEV.4 வளாகத்தில் காலை 10.30 மணிக்கும் ,
  • திண்டுக்கல்லில் D.G.M அலுவலகம் முன்பு காலை 10.30 மணிக்கும் ,
  • தேனியில் D.E அலுவலகம் முன்பு மாலை 03.00 மணிக்கும்  
ஆர்ப்பாட்டத்தை நடத்திட நமது BSNLEU + TNTCWU தோழர்கள் அனைவரும் திரளாக  திரண்டிட வேண்டுகிறோம் .
போராட்ட வாழ்த்துக்களுடன் ------தோழமையுடன் 
என்.சோணைமுத்து D.S-TNTCWU                எஸ்.சூரியன் D.S-BSNLEU



No comments: