Saturday 7 September 2013

06.09.2013 நடந்தவை. . . .

அருமைத் தோழர்களே!அனைவருக்கும் வணக்கம் . . .

நமது மத்திய சங்க அறைகூவலின்படியும், 03.09.2013 அன்று திருமங்கலத்தில் நடைபெற்ற செயற்குழுவின் முடிவின்படியும் ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கையை வலியுறித்தி நமது மதுரை SSAயில், மதுரை, திண்டுக்கல், தேனி ஆகிய 3 இடங்களில் ஆர்ப்பாட்டம்  மிகவும் சக்தியாக நடைபெற்றுள்ளது கலந்து கொண்ட BSNLEU+TNTCWU  அனைத்து தோழர்களுக்கும் மாவட்ட சங்கம் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் உரித்தாக்குகிறது . 

மதுரையில் LEVEL-4 வளாகத்தில்  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ...

தோழர்கள், S.மனுவேல்பல்ராஜ், K.வீரபத்திரன் இருவரும் கூட்டுத்தலைமை ஏற்றனர், BSNLEU மாநில அமைப்புசெயலர் தோழர்.செல்வின்சத்தியராஜ் துவக்கிவைத்து உரையாற்றினர், TNTCWU-D.S, தோழர்.என்.சோணைமுத்து,
ADS.தோழர்.V.சுப்புராயலு BSNLEU மாவட்டசெயலரும், TNTCWU சங்கத்தின், மாவட்ட உதவிசெயலருமான S.சூரியன் நிறைவு உரையாற்றினார்.இறுதியாக ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் TNTCWU - ADS தோழர்.உமாதியாகராஜன் நன்றி கூறினார். 7 பெண்கள் உட்பட 100 க்கும் மேற்ப்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

  திண்டுக்கல்லில் DGM வளாகத்தில்  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் . . .

தோழர்.E.கணபதி தலைமை தாங்கினார், மொத்தம் 60 பேர் கலந்து கொண்டனர், கோரிக்கையை விளக்கி, தோழர்கள். K.Sஆரோக்கியம், A.குருசாமி D.மூக்கையா, P.பாஸ்கரன், N.முத்துரத்தினம், A.வைத்தியலிங்கபூபதி ஆகியோர் பேசினர். BSNLEU மாநிலதுணைத் தலைவர், தோழர். எஸ்.ஜான்போர்சியா, நிறைவு உரை நிகழ்த்தினார்.இறுதியாக R.முத்து நன்றி கூறினார். 

தேனி Exchange வளாகத்தில்  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் . . .

தோழர்.P.தேசிங்கு தலைமை தாங்கினார், மொத்தம்  40 பேர் கலந்து கொண்டனர், தோழர்கள், T.K.சீனிவாசன், T.செல்லப்பாண்டி, கனகராஜ், S.தங்கதுரை, P.சந்திரசேகர், P.பிச்சைமணி, விஜயகாந்த், J.மைக்கேல்சிரில்ராஜ், H.ஸ்ரீராமன், ஆகியோர் கோரிக்கையை விளக்கி பேசினர்.
வாழ்த்துக்களுடன் . .  .எஸ்.சூரியன்,மாவட்ட செயலர்.


No comments: