Monday 30 September 2013

மதுரை அருகே பரிதாபம் : பங்குச்சந்தையில் ஏமாந்த குடும்பம் தற்கொலை

பங்குச்சந்தையில் பணம் போட்டால் கோடீஸ்வரனாகலாம், பணம் கொழிக்கும் என்ற ஆசைவார்த்தைகளை நம்பி பங்குச்சந்தையில் ரூ.8லட் சம் வரை முதலீடு செய்த நபர் பங்குச்சந்தையில் ஏற்பட்ட நஷ்டத்தால் தூக்கிட்டு தற்கொலைசெய்துகொண்டார்.அவர் மட்டுமல்லாது அவரது தாயும், தந்தையும் தூக்கிட்டு தற்கொலைசெய்து கொண்டனர்.

மதுரை தெற்குதாலுகா விரகனூரை அடுத்துள்ள சவுராஷ்டிராபுரத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணாராம் (55) இவரது மனைவி பிருந்தா (46), மகன் உபேந்திரன் (28), உபேந்திரன் , தனது நண்பர்கள் பலரிடம் லட்சக்கணக்கில் பணம் வசூலித்து பங்குச்சந்தையில் முதலீடு செய்துள்ளார்.பங்குச்சந்தை பெரும் வீழ்ச்சியடைந்ததால் அதில் பெரும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளார். பணத்தை கொடுத்த நண்பர்கள் பணத்தை திரும்பக்கேட்டுள் ளனர்.பங்குச்சந்தையை நம்பி ஏமாற்றமடைந்த உபேந்திரன், மற்றும் அவரது தந்தை கிருஷ்ணராம், பிருந்தா ஆகியோர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும்சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது. சிலைமான் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments: