Sunday 29 September 2013

எம்.பி., ராவ் இந்தர்ஜித் சிங்கிடம், விளக்கம் . . .

காங்கிரசில் இருந்து விலகப் போவதாக அறிவித்துள்ள, எம்.பி., ராவ் இந்தர்ஜித் சிங்கிடம், விளக்கம் கேட்டுள்ளது, கட்சி மேலிடம். காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மகள், பிரியங்காவின் கணவர், ராபர்ட் வாத்ரா, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகவும், அரியானா மாநிலத்தில், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்களை வளைத்து போட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார், குர்கான் தொகுதி, காங்கிரஸ், எம்.பி., ராவ் இந்தர்ஜித் சிங். 
மேலும், ராபர்ட் வாத்ரா மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்த அவர், இனிமேலும் கட்சியில் நீடிப்பது சரியல்ல என கூறி, பதவியை ராஜினாமா செய்யப் போவதாக, ரேவாரி என்ற இடத்தில், பொதுக்கூட்டத்தில் அறிவித்தார். இதனால், கட்சி மேலிடம் கலக்கம் அடைந்தது; சோனியாவின் மருமகன் குறித்து அப்பட்டமாக, புகார் கூறிய,எம்.பி.,மீதுகாட்டம்கொண்டது. 
டில்லியில் உள்ள கட்சி தலைமையகத்திலிருந்து, நேற்று, ராவ் இந்தர்ஜித் சிங்கிற்கு, நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், உங்களின் ராஜினாமா கடிதம், இன்னமும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. அக்டோபர், 7ம் தேதிக்குள், ராஜினாமா கடிதம் கிடைக்கவில்லை என்றால், பொதுக்கூட்டத்தில் நீங்கள் அறிவித்த படி, கட்சியிலிருந்து விலகியதாக கருத நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: