Thursday 16 January 2014

ஜனவரி -17 எம்.ஜி .ஆர். பிறந்த நாள். . . . .

டாக்டர் எம்.ஜி.ஆர் தோற்றம் -17-1-1917  மறைவு -24-12-1987
எம்.ஜி.ஆர். என்ற மூன்று எழுத்தால் பாரெங்கும் புகழ்பெற்றபுரட்சித் தலைவர் மக்கள் திலகம் பாரத ரத்னா டாக்டர். எம்.ஜி.இராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்) என்ற மருதூர் கோபால மேனன் இராமச்சந்திரன்   1917ஆம்   ஆண்டு   ஜனவரி   17ஆம்   நாள் இலங்கை யின்  கண்டிக்கு அருகேயுள்ள  நாவலப்பிட்டியில்மருதூர் கோபால மேனனுக்கும்  சத்திய பாமாவுக்கும்   மகனாகப் பிறந்தார்.   அவருடைய   தந்தையின்   மறைவுக்குப்  பின்  தாயும்மகனும் தமிழகத்தில் கும்பகோணத்தில் குடியேறினார்கள்.குடும்ப சூழ்நிலை  காரணமாக சிறுவயதிலேயே அவர்நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். பின்னர்  படிப்படியாகஉயர்ந்து திரைப்படங்களில் நடிக்கத் துவங்கினார். 1936-ல் சதிலீலாவதி என்னும்திரைப்படத்தில்முதலில்நடித்திருந்தும், 1947ல்   அவர் நடித்த   ராஜ குமாரி  படம்  வெளிவரும்வரை அதிகம்புகழ் கிடைக்கவில்லை. தொடர்ந்து வந்த அடுத்த 25  ஆண்டுகள்,எம்.ஜி.ஆர். தமிழ் திரைப்பட உலகில் மிக முக்கியமான வர்களில்ஒருவராக விளங்கினார்.எம்.ஜி.ஆர். நடித்த திரைப்படங்கள் 135. இவற்றுள் அவர் கதாநாயகனாக நடித்த படங்கள்  எண்ணிக்கை115.எம்.ஜி.ஆர். முதலில் தங்கமணி என்பவரை மணந்தார். அவர் நோயுற்று இறந்துவிடவே பின்னர் இரண்டாவதாக சதானந்தவதியைமணந்தார். இவரும் நோயுற்று இறந்து விட் டார். பின்னர் எம்.ஜி.ஆர். வி. என் .ஜானகியை மணந்து கொண்டார். துரதிர்ஷ்டவசமாகஇவர்களுக்கு குழந்தைப்பேறு வாய்க்க வில்லை. எம்.ஜி.ஆர். ஆரம்பநாட்களில் காங்கிரஸ் ஆதரவாளராகவும், நேதாஜி பக்தராகவும்இருந்தார். பின்னர் ராஜகுமாரி, மந்திரிகுமாரி படப்பிடிப்பு நாட்களில் கலைஞர் கருணாநிதியுடன் கொண்ட நட்பால்திராவிடமுன்னேற்றக் கழகத்தின் பால் ஈர்க்கப்பட்டார். பின்னர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய உறுப்பினராக திகழ்ந்தார். எம்.ஜி.ஆர்.  அக்கட்சியின்   பொருளாளராகவும் நீண்ட காலம் பணியாற்றினார். சி. என். அண்ணாதுரையின் மறைவுக்குப்பின்,  முதலமைச்சராக பதவி ஏற்ற கலைஞர் மு.கருணாநிதியுடன் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக எம்.ஜி.ஆர். திராவிட முன்னேற்றக்கழகத் திலிருந்து வெளியேறி னார். 1972ஆம் ஆண்டு   அக்டோபர்   17ஆம் நாள்   அனைத் திந்திய     அண்ணா         திராவிட முன்னேற்றக் கழகம்என்ற பெயரில் புதிய கட்சியைத் துவங்கினார். 1977ல் நடைபெற்ற தேர்தலில் பெரும் வெற்றி பெற்று தமிழக முதல்வராகப் பொறுப் பேற்றார். பின்னர் 1980ஆம் ஆண்டு நடை பெற்ற தேர்தலிலும் வெற்றி பெற்று மீண்டும்  இரண்டாம்முறையாகமுதல்வரானார்.
1984ல் இவர் சிறு நீரகக் கோளாறு காரணமாக கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டார்.  இதற்கு  சிகிச்சை  பெற  அமெரிக்காவின்  புருக்ளின் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டார். மருத்துவமனையில் இருக்கும் போதே தமிழகத்தில் நடை பெற்ற தேர்தலில் மாபெரும் வெற்றி  பெற்றார். 1987ஆம்   ஆண்டு வரை   10 ஆண்டுகள்   தொடர்ச்சியாக  முதலமைச்சர் பதவியை வகித்து பதவியிலிருக்கும் போதே1987 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் நாள் இயற்கை எய்தினார். அவரது மறைவிற்குப் பின் அவருக்கு பாரத ரத்னா விருதுவழங்கப்பட்டது. இன்றளவும் எம்.ஜி.ஆர். அவர்கள் தாம் நடித்த திரைப்படங்களுக்காக மட்டுமின்றி, தம் ஆட்சிக்காலத்தில்செயல்படுத்திய பல மக்கள் நல்வாழ்வு திட்டங்களுக்காகவும் மிகவும் போற்றப்படுகிறார். அவற்றுள் மிக முக்கியமானதுபள்ளி மாணவர்களுக்காக அவர் கொண்டுவந்த சத்துணவுத் திட்டம் ஆகும் எம்.ஜி.ஆர்.அவர்கள்பெற்றவிருதுகள் மற்றும்கௌரவங்கள்  1960 ஆம்   ஆண்டு பத்மஸ்ரீ   விருதுக்கு தேர்வு   செய்யப்பட்டும்  இந்தியில் அதன் வாசகங்கள் இருந்ததால் ஏற்கமறுத்துவிட்டார்.1972 ஆம் ஆண்டு ரிக்க்ஷாகாரன் படத்துக்காக சிறந்த  நடிகருக்கான தேசிய விருது 1987ஆம் ஆண்டு மரணத்துக்கு பிந்தைய பாரதரத்னா விருது   சென்னை   பல்கலை   மற்றும்   அரிசோனா   உலகப்  பல்கலையின் டாக்டர்பட்டம் தரப்பட்டது. எம்.ஜி.ஆர்.பிறந்த நாளில் அவரது நினைவை போற்று வோம்.. . . .

No comments: