Wednesday 15 January 2014

பாகிஸ்தான் சிறுமி மலாலா அறிக்கை . . .

உயிர்த் தியாகம் செய்த சிறுவனுக்கு விருது

பாகிஸ்தானில் தற்கொலை தாக்குதலை தடுத்து தன் உயிரை தியாகம் செய்த 14 வயது சிறுவனுக்கு அந்நாட்டின் உயரிய விருது வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.தன் பள்ளியின் மீது தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்படுவதை அறிந்த ஒன்பதாம் வகுப்பு மாணவன் ஐத்ஸாஸ் ஹுசைன் வெடிகுண்டு ஏந்தி வந்த தீவிரவாதியை பள்ளி வளாகத்தின் முன்பாகவே தடுத்து நிறுத்தினான். அப்போது குண்டு வெடித்ததில் அவனும் உயிரிழந்தான். சிறு வயதிலும் துணிச்சலோடு வீரச்செயல் புரிந்த சிறுவனை கௌரவிக்கும் வகையில் அந்நாட்டின் உயரிய விருதான சித்தாரா--ஷூஜாத் என்ற விருதை அளிக்க பிரதமர் நவாஸ் ஷரிஃப் தீர்மானித்தார். தன் உயிரை தியாகம் செய்து பல நூறு அப்பாவி குழந்தைகளை காப்பாற்றியதை மறக்க கூடாது என்றும், இதன் பிறகாவது தனது நாட்டு மக்களுக்கு அமைதி கிடைக்கட்டும் என்றும் பெண் கல்விக்காக குரல் கொடுக்கும் பாகிஸ்தான் சிறுமி மலாலா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

No comments: