Thursday 16 January 2014

ஆட்சி மாற்றம் மத்தியில் ஏற்பட வேண்டும். . . .

தவறான பொருளாதாரக் கொள்கைகளை மாற்றும் ஆட்சி ஏற்பட
வேண்டும்: ஜெயலலிதா
தவறான பொருளா தாரக் கொள்கைகள் மாற்றப்பட்டு புது சிந்தனையுடன் மக்களின் தேவைகளைப் பரிவுடன் அணுகும் புதிய ஆட்சி ஏற்பட வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். எம்.ஜி.ஆரின் 97-ஆவது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு அதிமுகவினருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், மாநிலங்கள் வலுப்பெற்றிருந்தால் மட்டுமே இந்தியக் குடியரசு வலுப்பெற்றிருக்க முடியும். இதற்குத் தேவை மத்தியில் ஆட்சி மாற்றம். தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் நன்மை பயக்கக் கூடிய ஆட்சி மாற்றம் மத்தியில் ஏற்பட வேண்டும். 20 ஆண்டுகளாக நிலவி வரும் தவறான பொருளாதாரக் கொள்கைகள் மாற்றப்பட்டு புது சிந்தனையுடன் மக்களின் தேவைகளைப் பரிவுடன் அணுகும் புதிய ஆட்சி ஏற்பட வேண்டும். தமிழகத்தை வளப்படுத்த, பாரதத்தை வலிமைப்படுத்த, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளிலும் வெற்றிக் கனியைப் பெறும் வகையில் களப்பணி அமைய வேண்டும் என்று கூறியுள்ளார்

No comments: