Thursday 16 January 2014

தற்போதைய . . . .செய்தி . . . துளிகள் . . .

பொதுக் காப்பீட்டு ஊழியர்கள் வேலை நிறுத்தம்
காப்பீட்டுத் துறையில் 26 முதல் 49 சதம் வரையிலான அந்நிய நேரடி முதலீட்டை எதிர்த்து பொதுக் காப்பீட்டு நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்ய அறைகூவலிட்டுள்ளார்கள். நமது மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்! 
குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.1000 உறுதி செய்யப்பட வேண்டும்
ரூ. 300 அல்லது 400 மட்டுமே ஓய்வூதியமாகப் பெறக்கூடிய ஊழியர்கள் இன்றும் இருக்கிறார்கள். மத்தியத் தொழிற்சங்கங்கள் நீண்ட காலமாக இதை எதிர்த்தும் குறைந்த பட்ச ஓய்வூதியத்தை உயர்த்தவும் போராடி வருகின்றன. தற்போது குறைந்த பட்ச ஓய்வூதியமாக ரூ.1000 வழங்குவதற்கான முன்மொழிவை EPF அலுவலகம், அரசுக்கு அனுப்பி இருக்கிறது. 
ரூ.600 கோடிக்கு மொபைல் உபகரணங்கள்
2 G மொபைல் சேவை விரிவாக்கத்திற்காக ரூ.600 கோடிக்கு GSM உபகரணங்களை வாங்க, MTNLமுடிவு செய்திருப்பதாக அதன் CMD, திரு கார்க் தெரிவித்துள்ளார். 
வங்கி ஊழியர்களின் ஊதிய மாற்றத்திற்கான பேச்சு வார்த்தை
ஜனவரி 20 அன்று வேலை நிறுத்தம் செய்வதாக வங்கி ஊழியர்கள் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்து இருந்தது. அதன் பின்னணியில் 13.1.2014 அன்று CLC நடத்திய பேச்சுவார்த்தைக் கூட்டத்தில், வேலைநிறுத்தத்திற்கு முன்பாக இந்திய வங்கிகள் அமைப்பும் வங்கிகளின் தொழிற்சங்கக் கூட்டமைப்பும் கூடி பேச்சுவார்த்தை நடத்த சம்மதித்துள்ளன. பேச்சுவார்த்தையில் 1.1.2012 முதலான ஊதிய மாற்றத்தில், ஊதிய உயர்வு சதவீதம் என்பதே முக்கிய அம்சமாக இருக்கும்.  
GoMபரிந்துரைப்படிஅரசுநிறுவனங்கள் BSNL, MTNL இணைப்புகளைப் பயன்படுத்த வேண்டும்.
அமைச்சரவைக் குழுக் கூட்டம், அனைத்து மத்திய, மாநில அரசு நிறுவனங்களும் BSNL, MTNL தொலைபேசி வசதிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று சமீபத்தில் பரிந்த்துரைத்தது. இதற்கு தனியார் செல்லுலார் நிறுவனங்கள் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.அரசிடம் இருந்து வரிச் சலுகைகள், வருமானப் பகிர்வு, அனுமதிக் கட்டணம் போன்றவற்றில் பல்வேறு சலுகைகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் அனுபவித்து வருவதோடு பல்வேறு முறைகேடுகள் செய்து முறையாக அரசுக்குச் சேர வேண்டிய கட்டணங்களை முடக்கி வைத்திருக்கின்ற தனியார் நிறுவனங்களுக்கு இதை எதிர்க்கின்ற யோக்கியதை சிறிதும் கிடையாது என்பதே உண்மை.அரசு விரைவில் இது தொடர்பான முடிவினை எடுத்து அறிவிக்க வேண்டும். 
சில்லறை வர்த்தகத்தில் 100 சதம் அந்நிய முதலீட்டை டில்லியின் முந்தைய காங்கிரஸ் அரசு அனுமதித்திருந்தது. தற்போதைய ஆம் ஆத்மி அரசு அதை ரத்து செய்து அறிவித் திருக்கிறது. சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டுக்கு அனுமதி இல்லை :
தில்லி மாநிலஅரசுமுடிவுதில்லியில் சில்லரை வர்த் தகத்தில் அந்நிய நிறுவனங்கள் நேரடி முதலீடு செய்ய ஷீலா தீட்சித் தலைமையிலான முந்தைய காங்கிரஸ் அரசு அனு மதி வழங்கியது. தற்போது இந்த அனுமதியை வாபஸ் பெறஅரவிந்த் கெஜ்ரிவால் தலைமை யிலான ஆம் ஆத்மி அரசு முடிவுசெய்துள்ளது.இதுதொடர்பாக தில்லி மாநில தொழில்துறை செய லாளர் அமித் யாதவ், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகத்தின் தொழில் கொள்கை மேம்பாட் டுப் பிரிவுக்கு கடிதம் எழுதி யுள்ளார்.அதில், ‘‘சில்லரை வர்த்தகத் தில் அந்நிய நேரடி முதலீடு விஷயத்தில் தில்லி மாநில அரசு தன் முந்தைய முடிவை மறுபரிசீலனை செய்தது.உலக அளவில் பெரும்நிறுவனங்களான வால்மார்ட்,டெஸ்கோ போன்றவற்றை இங்கு கடைகள் அமைக்க அனு மதிப்பதால் பெரிய அளவில் வேலைவாய்ப்பு இழப்புகள் ஏற்படும்.எனவே அந்நிய நேரடி முதலீட்டை ஆதரிப்ப தில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது’’ என்று தெரிவிக் கப்பட்டுள்ளது.ஆம் ஆத்மியின் தேர்தல் அறிக்கையில் சில்லரை வர்த்த கத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்க மாட்டோம் என்று கூறப்பட்டு இருந்தது. அதன்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விடுதலையாகும் தமிழகஇலங்கை மீனவர்கள் சர்வதேச கடல் எல்லையில் இன்று ஒப்படைக்கப்படுகிறார்கள்
இலங்கைதமிழக மீனவர்கள் பரஸ்பர விடுதலை செய்யப்படுகிறார்கள். அவர்கள் சர்வதேச கடல் எல்லையில் ஒப்படைக்கப்படுகிறார்கள்.கடலோர பாதுகாப்பு படை அறிக்கைஇதுதொடர்பாக இந்திய கடலோர பாதுகாப்பு படை அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–விடுதலை செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் 52 பேர் இந்திய கடலோர பாதுகாப்பு படை கப்பல்விஷ்வஸ்ட்மூலம் அழைத்து செல்லப்பட்டு, இன்று (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு இந்தியஇலங்கை சர்வதேச கடல் எல்லையில்சக்திஎனும் இலங்கை கடற்படை கப்பலில் ஒப்படைக்கப்படுகிறார்கள். இதற்காக 52 மீனவர்கள் நேற்று மாலை 5.30 மணியளவில், இந்திய கடலோர பாதுகாப்பு படையிடம், உள்ளூர் போலீசார் ஒப்படைக்கப்பட்டனர்.அதே போன்று விடுதலை செய்யப்பட்ட 52 தமிழக மீனவர்கள்சக்திஎனும் இலங்கை கடற்படை கப்பல் மூலம் அழைத்து வரப்பட்டு, காரைக்காலில் உள்ள மீன் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுகிறார்கள்.தமிழக மீனவ பிரதிநிதிகள், இலங்கை மீனவ பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை சென்னையில் 20–ந் தேதி நடைபெற இருக்கும் நிலையில், இருநாட்டு மீனவர்கள் பரஸ்பர விடுதலை நடைபெற்று இருக்கிறது.கடந்த ஆண்டு இதே போன்று இலங்கையை சேர்ந்த 23 மீன்பிடி படகுகளும், 124 மீனவர்களும், இந்தியாவை சேர்ந்த 38 மீன்பிடி படகுகளும், 391 இந்திய மீனவர்களும் பரஸ்பரமாக ஒப்படைக்கப்பட்டிருக்கிறார்கள்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

No comments: